நாக்கில் உள்ள புண்கள் அல்லது திரவம் நிறைந்த குமிழ்கள் நாக்கு கொப்புளங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.கொப்புளம் ஏற்படுவதற்கு முன்,புண்கள் ஏற்பட்டு எரியத் தொடங்குகிறது.இவை கூச்ச உணர்வு மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுகிறது.
அறிமுகம்
சிலருக்கு வாய் பகுதிகளில் நாக்கு கொப்புளமானது அடிக்கடி ஏற்படும் சாதாரண நிலை. இவை உண்ணும் போதும் விழுங்கும் போதும் சிரமம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம்.இது வீக்கம்,திட்டுகள் அல்லது புண்களை ஏற்படுத்தும். இவற்றால் எந்த தீங்கும் இல்லை என்றாலும்,கொப்புளங்கள் சிலரை எரிச்சலடையச் செய்வதோடு சுவை உணர்வைத் தடுக்கிறது.
நாக்கு கொப்புளங்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் வாழ்நாளின் ஒரு கட்டத்தில் அனுபவிக்கின்றனர். நாக்குக் கொப்புளங்கள் மிகவும் வேதனையாக இருந்தாலும், 7-10 நாட்களுக்குப் பிறகு அவை இயற்கையாகவே சரியாகிவிடும்.
ஈஸ்ட் தொற்று,தற்செயலாக நாக்கைக் கடித்தல்,வாய் புண்கள்,ஒவ்வாமை,மருக்கள் மற்றும் ஸ்டோமாடிடிஸ் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ நோய்கள் ஆகியவை நாக்கு கொப்புளங்அதிர்ச்சிகளுக்கு சில பொதுவான காரணங்களாகும்.நாக்கு கொப்புளங்கள் அடிபடுதல் மற்றும் அடிப்படை தொற்று காரணமாகவும் ஏற்படலாம்.
நாக்கில் கொப்புளங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
அதிக உணர்திறன்
சில சமயங்களில் ஒவ்வாமை எதிர்வினையாக அதிக அசாதாரண உணர்திறன் ஏற்படுகிறது சிவந்து காணப்படுதல் மியூகோசாவை வெண்மையாக்குதல், நாக்கு வீக்கம், புண்கள் மற்றும் கொப்புளங்கள் உள்ளிட்டவை வாய் உள்புறம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசாதாரண உணர்திறன் மூலம் ஏற்படுகிறது.
தொற்று
வாயில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்று கொப்புளங்களாக வெளிப்படலாம். தொற்றும் தன்மையுடைய ஹெர்பிஸ் உமிழ் நீர், பாதிக்கப்பட்ட இடத்தை தொடுவதன் மூலமாகவும் பரவ வாய்ப்புண்டு. ஹெர்பிஸ் சிம்பிலஸ் வாயிலாக காய்ச்சல், நீர் கொப்புளங்கள் மற்றும் புண்கள் ஏற்படும்.
ஹார்மோன்கள்
ஹார்மோன் சமநிலையின்மை அல்லது ஏற்ற இறக்கங்கள் காரணமாக வாய் ஹெர்பெஸை தொற்று ஏற்படுத்துகின்றது.இது நாக்கு கொப்புளங்களாக வெளிப்படுகிறது.
சில பெண்களுக்கு வாயில் சில மாற்றங்கள் ஏற்படும். அவை சிவப்பு நிற புண்,வீங்கிய ஈறுகள், வீங்கிய உமிழ்நீர் சுரப்பிகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக புற்றுநோய் புண்கள் அல்லது ஈறுகளில் இரத்தம் கசிதல் உண்டாகும்.
மாதவிடாய் காலங்களில் புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பதனால் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் உண்டாகிறது.
மன அழுத்தம்
நாக்கில் கொப்புளங்கள் தோன்றுவதற்கான முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் சோர்வாகும்.
நாக்கு கொப்புளங்களின் அறிகுறிகள்
நாக்கு கொப்புளங்களின் சில அறிகுறிகள் பின்வருமாறு
- வலிமிகுந்த கொப்புளங்கள்
- சிவப்பு அல்லது வெள்ளை நிற புண்கள்
- கன்னம் அல்லது நாக்கில் புண்கள்
- வாய் எரிச்சல்
- காய்ச்சல் (சில நேரங்களில்)
நாக்கு கொப்புளங்களுக்கான சிகிச்சைகள்
உப்பு நீர் வாய் கொப்பளிக்கவும்
பொதுவாக உப்பில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் தன்மையானது வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.இவை தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் ஒரு சிறந்த இயற்கை வைத்திய நிவாரணியாகும்.
நாக்கில் ஏற்படும் கொப்புளங்களுக்கு சிகிச்சையளிக்க, ஒரு டீஸ்பூன் உப்பை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, நன்கு கொப்பளிக்க வேண்டும்.இது சிறந்த பயனைத் தரும்.
வாய் கழுவுதல்
சிலர் வாய் புத்துணர்ச்சி மற்றும் தூய்மைக்காக மவுத்வாஷ்களை பயன்படுத்துவது உண்டு. இவை நாக்கு கொப்புளங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.கொப்புளங்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
புகையிலை பயன்பாடு வாய் மற்றும் நாக்கின் மென்மையான திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதனால் புண் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.புகையிலை பொருட்களை தவிர்ப்பது நாக்கு கொப்புளங்களை குணப்படுத்த உதவுகிறது.
காரமான, உப்பு மற்றும் அமிலத்தன்மை உணவுகளை தவிர்க்கவும்.
சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச்சாறுகள், காரமான அல்லது உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் தக்காளி உள்ளிட்ட அமில உணவுகள் நாக்கு கொப்புளங்களை மோசமாக்கும். இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மதுவை தவிர்த்தல்
ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் போது உடலில் டிஎன்ஏவுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை அதிகரிக்கும். இது வாய் மற்றும் நாக்கில் புண்கள், திட்டுகள் அல்லது கட்டிகளை உண்டாக்குகிறது.
குடிப்பழக்கம் கொப்புளம் அல்லது புண்களை மேலும் மோசமாக்கி அதிக வலியினை ஏற்படுத்தலாம்.
அல்சர் இருந்தால் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியமான உணவை உண்பது
ஆரோக்கியத்தை மேம்படுத்த சரிசதவிகித, சத்தான உணவை உண்ண பின்வருவனவற்றை கடைபிடிக்கவும்.
- மென்மையான மற்றும் காரமில்லாத உணவுகள் எளிதில் மெல்லக்கூடியவை.வாய் கொப்புளங்களுக்கு சிறந்த ஒன்று.
- நாக்கு கொப்புளங்களை மோசமாக்கும் உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
- சாப்பிடுவதற்கு எளிதாக உணவுகளை தயாரிப்பது சிறந்தது.
- சூடான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- புரதம் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உடல் எடை குறைய உதவும்.
- நாக்கு கொப்புளங்களை குணப்படுத்த நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
நாக்கு கொப்புளங்களுக்கான வீட்டு வைத்திய குறிப்புகள்
டூத் பேஸ்ட்
வாய் புண்களுக்கான சிகிச்சையாக சிறிய, வட்டமான தலைகள் கொண்ட மென்மையான பல் துலக்கிகளை பயன்படுத்த வேண்டும்.அவை மென்மையான வாய் திசுக்களில் மென்மையாக செயல்படும்.
உணர்திறன் வாய்ந்த வாய்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டூத் பேஸ்ட்டை தேர்வு செய்யவும். கூடுதலாக, நுரையை உண்டாக்கும் ரசாயனமான SLS (சோடியம் லாரில் சல்பேட்) சேர்க்காத டூத் பேஸ்ட் ஆனது கொப்புளங்களைத் தடுக்க உதவுகிறது.
நாக்கு மற்றும் ஈறுகளை தூய்மைப்படுத்துதல்
பல் துலக்குதல் மற்றும் சுத்தம் செய்வது நாக்கில் கொப்புளங்களை உண்டாக்கும். தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்கவும்
உணவுக்குப் பிறகு வாயை கொப்பளிப்பது உடலின் இயற்கையான தூய்மைப்படுத்தும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், வாயில் உள்ள பெரும்பாலான தொற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அகற்றி, அதன் மூலம் நாக்கு கொப்புளங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான மற்றும் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை உண்பது சாப்பிடுவது நாக்கு கொப்புளங்கள் போன்ற வாய்வழி தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
பரிசோதனைக்காக பல் மருத்துவரை தவறாமல் அணுகுவது
பெரும்பாலான கொப்புளங்கள் தானாகவே சரியாகிவிடும், ஆனால் அதுவே குணமாவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.மருத்துவர் ஒரு சாதாரண கொப்புளத்தை கடுமையானவற்றிலிருந்து வேறுபடுத்தலாம்.பல் மருத்துவரை தவறாமல் அணுகி பல்லை பரிசோதிப்பது நோயறிதல் மற்றும் நோயின் தீவிரத்தை குறைக்க உதவும்.
ஒவ்வொரு இரவும் செயற்கை பற்களை அகற்ற வேண்டும்
ஒரு சில நபர்களுக்கு செயற்கை பற்களானது வாயில் புண்கள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்வதற்கு முன்பு பற்களை அகற்றுவதன் மூலம் தொற்றுக்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுவதை ஓரளவு தடுக்கலாம்.
நாக்கில் ஏற்படும் கொப்புளங்களின் காரணிகள்
காபி ஒவ்வாமை
காபி ஒவ்வாமை மிக அரிய ஒன்றாகும். வெகு சிலருக்கு காபி ஒவ்வாமை உள்ளது. இது பல வழிகளில் வெளிப்படும். மிக முக்கிய ஒன்று நாக்கில் ஏற்படும் கொப்புளங்கள்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் மருத்துவரை அணுகவும்.
அனாபிலாக்ஸிஸ் காரணமாக நாக்கு வீங்குதல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி அவசர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
நாக்கில் வலி மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஒரு நபருக்கு வலிமிகுந்த கொப்புளங்கள் நாக்கில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் பெரியதாகி அத்துடன் வலி மிகுந்த கொப்புளங்கள் அடிக்கடி ஏற்பட்டாலோ மருத்துவரை பார்ப்பது அவசியம்.மருத்துவர் பரிசோதித்து நோயாளியின் மருத்துவ பின்னணி மற்றும் உணவு பழக்கவழக்கங்களை கண்டறிந்து சிகிச்சையளிப்பர்.
சிபிலிஸ் மற்றும் காசநோய் போன்ற நோய்களைக் கண்டறிய மருத்துவர் எப்போதாவது இரத்தப் பரிசோதனையை பரிந்துரைக்கலாம்.புற்றுநோய் என சந்தேகப்பட்டால் அல்லது புடைப்புகளின் தோற்றம் தெளிவாக இல்லை என்றால், மருத்துவர் பயாப்ஸி அல்லது லம்பெக்டோமி போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவர்.
முடிவுரை
நாக்கு கொப்புளங்கள் நாக்கில் புண்கள் அல்லது திட்டுகளாக ஏற்படும். நாக்கில் ஏற்படும் புண் அல்லது கொப்புளம் சிரமத்தை கொடுக்கும்.அவை குறுகிய கால பிரச்சனை மட்டுமே பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.
கடைகளில் விற்கப்படும் வலி நிவாரணிகள் அவசரகாலத்தில் உதவியாக இருக்கும்.எனினும், மருத்துவரை அணுகி சிகிச்சைகளை மேற்கொள்வதே பாதுகாப்பானது.
நாக்கு கொப்புளங்கள் கடுமையானதா?
நாக்கு கொப்புளங்கள் தானாகவே சரியாக கூடியது.அவை வலி மற்றும் அசௌகரியத்தைக் கொடுத்தாலும், அவை அடிப்படையில் கவலைக்குரியவை அல்ல.நாக்கில் கொப்புளங்கள் வந்தால் என்ன செய்வது?
பெரும்பாலான கொப்புளங்கள் காலப்போக்கில் குணமடைகின்றன, ஆனால், வெதுவெதுப்பான நீரில் உப்பை கலந்து வாயைக் கொப்பளிப்பது போன்ற எளிய வீட்டு வைத்தியங்கள் குணப்படுத்தும் உப்பிற்கு பதிலாக பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.நாக்கில் கொப்புளங்கள் குணமடைய எத்தனை வாரங்கள் ஆகும்?
வழக்கமான வாய்வழி பராமரிப்பு மற்றும் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், நாக்கில் அல்லது கன்னங்களில் உள்ள பெரும்பாலான கொப்புளங்கள் இரண்டு வாரங்களில் குணமாகும்.இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரு புண் அல்லது கொப்புளம் தொடர்ந்தால் கவனிக்கப்பட வேண்டும். மேலும் அறிகுறிகள் தோல் சொறி , காய்ச்சல், விழுங்குவதில் சிரமம் அல்லது கொப்புளங்களைத் தவிர எச்சில் வெளியேறினால் நோயறிதலுக்கு மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.